Friday, May 21, 2010

நாங்கள் யார் ?

அணுகுண்டு சத்தத்தில் தினமும் கண்விழிப்பு

அப்பாவி இளைஞர்கள் சித்திரவதை சிகரத்தில்

சகோதரிகள் கண்ணெதிரே கற்பிழக்க

பள்ளிக்கு சென்ற மழலையை பாடையில் கொண்டுவந்து

பேசாமடந்தையாக்கி அனைவரும் மரண படுக்கையில்

அவல குரலுடன் தினமும் கண்ணுறங்க

இப்படியுமாய் உயிருடன் இருக்கும் நாங்கள்

ஈழத் தமிழர்கள்....


இவன்
-நா. இரவி ஷங்கர்

Wednesday, May 12, 2010

துணை

பெண் மடிந்தவுடன் ஆண் ஒரு துணையை தேடுகிறான்
ஆனால்...
ஆண் மடிந்தவுடன் பெண் இறந்து அவன் துணையை தேடுகிறாள்

எதற்காக?

அவனில்லாத உலகில் வாழப் பிடிக்காமலா?

இல்லையேல்...

அங்கும் அவன் நிம்மதியாக இருக்கக் கூடாதென்பதற்காகவா?

இவன்
-நா. இரவி ஷங்கர்.

Monday, May 3, 2010

கல்லூரி சாலை

வாலிபர்கள் கல்லூரிச் சாலையை முறைத்தபடி நின்றனர்
மகளிர் கல்லூரி நெடுவிடுமுறையையொட்டி.
சென்னை வாசிகளும் கல்லூரிச் சாலையை முறைத்தபடி நின்றனர்
வானிலை ஆராய்ச்சி நிலையத்தை நோக்கி.

பி.கு:
இந்திய வானிலை ஆராய்சிக் கழகம்
தணியும் என எச்சரித்தும் தணிந்தபாடில்லை - வெயில்.