தினமும் அவனை கண்காணித்து
அணுபொழுதும் அவனது அசைவுகளை நோட்டமிட்டு
விருப்பு வெறுப்புகளை தெரிந்துகொண்டு
நிழலைவிட அதிக நேரம் பின்தொடர்ந்து
பார்த்த க்ஷணத்தில் தாக்க தயார்படுத்திக்கொண்டு... ... ...
இப்படி அவனைவிட அதிகமாக
அவனை தெரிந்துகொண்ட நீ,
ஏனவனை தன்மயமாக்கிக் கொள்ளாமல்
அழிக்க முனைகிறாய்?
இப்படிக்கு.
-நா. இரவி ஷங்கர்.
Tuesday, April 6, 2010
Subscribe to:
Posts (Atom)