Monday, February 15, 2010

படித்ததில் மனதில் நின்ற வரிகள்

பள்ளியில் படித்ததில் மனதில் நின்ற வரிகள்:

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளென கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று.

விளக்கவுரை:
முதல் வரி:
ஒரு மனிதன் மற்றொருவனிடம் யாசித்தால் (குறிப்பாக பணம்) அல்லது பிச்சை கேட்கும் பட்சத்தில், அது ஓர் இழிவான செயலாகும். அதற்க்கு அந்த மற்றொருவன் தன்னிடம் பணம் இருந்தும் இல்லையென்றால் அது அதைவிட இழிவான செயலாகும்.

இரண்டாம் வரி:
ஒரு மனிதன் மற்றொருவனுக்கு தானாக முன்வந்து அன்பளிப்பது (குறிப்பாக பணம்), ஓர் உயர்ந்த செயலாகும். அதற்க்கு அந்த மற்றொருவன் தனக்கு அது வேண்டாம் என்பது அதைவிட உயர்ந்த செயலாகும்.

பி.கு: இதில் ஏதேனும் பிழையிருப்பின் அதை மண்ணிக்கவினைகிறேன்.
பிழைதிருத்த இவ்வரிகள் எந்நூலைச் சார்ந்ததென்பதை அறியேன் (மறந்தேன்).


இவன்
-நா. இரவி ஷங்கர்.

2 comments: