Thursday, January 21, 2010

பசுமை நினைவுகள்

நுங்கு மட்டையில் வண்டி ஓட்டியது
ஈச்ச மரத்தில் ஏறி காயமடைந்தது
தண்டவாளத்தில் காது வைத்து படுத்தது
புளியமர நிழலில் கோலி விளையாடியது
கிணற்றடியில் துணி துவைத்துக் குளித்தது
ஊஞ்சலில் விளையாட சண்டைபோட்டது
குட்டையில் கும்பலாக குளித்தது
திருவிழாவில் தாமரை இலையில் சாப்பிட்டது
பாலைஸ் (பால்-ஐஸ்) எனக்கு உனக்கு என சண்டையிட்டது
பாட்டிக் கையால் வைத்த சாம்பாரை சுவைத்தது
தாத்தா கைப்பிடித்து கோவிலுக்கு சென்றது
தாதா vs பாட்டி குறும்புச் சண்டை
தாத்தாவிடம் கற்ற reef-knot தந்திரம்
நண்பர்களுடன் ஏழு-கல் விளையாடியது
திண்ணையில் கூட்டமாக தூங்கிப் புரண்டது

இதைப்போல் ஏராளமாக...
அதற்க்கு பல பக்கங்கள் வேண்டும்...
ஆகவே இவற்றுடன் விடைபெறுகிறேன்.!!!

இவன்
-நா. இரவி ஷங்கர்.

No comments:

Post a Comment