Tuesday, January 5, 2010

நான் எங்கே?

என் சகோதரன் அழுதான், அவனுக்கு தருவதாக கூறி தராமல் சென்றதுக்காக (பணம்).

என் சகோதரி அழுதாள், இனி அவள் எங்கே சென்று முறையிடுவாளென (சோகத்தை).

என் தாய் தந்தை அழுதார்கள், இனி அவர்களின் நிலையை எண்ணி (வருங்காலத்தை).

என் குழந்தைகள் அழுதார்கள், இனி எங்களுக்கு யார் வாங்கித்தருவார்கள் என்று (பொருட்கள்).

என் உறவினர் சிலர் அழுதனர், இனி இவனுக்கு திருப்பித் தரவேண்டியதில்லை என்று (கடனை - சந்தோஷத்தில்)

என் மனைவி அழுதாள், என்னால் துயர்துடைக்க இயலவில்லை...!!!
ஆறுதல் கூறவும் முடியவில்லை...!!!

ஏனெனில் நான் அனைவரின் மத்தியில் சவப்பெட்டியினுள்.


-இவன்
நா. இரவி ஷங்கர்.

No comments:

Post a Comment