Monday, December 14, 2009

யார் இவன்?

...
இவன் சென்றடையாத மனிதர்களே இல்லை
இவன் வரும் வரை அனைவருக்குமே சந்தோஷம் தான்
இவன் வந்த பின்னர் தான் நம்மிடம் இருந்தவற்றின் பெருமைகள் நன்கு தெரியவரும்
இவன், என்றாவது ஒரு நாள் ஒவ்வரின் வாழ்க்கையிலும் வருவது உறுதி
இவன் சிலரது வாழ்க்கையில் பல நாட்கள் இருப்பதும் உண்டு
இவன் பலரது வாழ்க்கையில் சில நாட்கள் இருப்பதும் உண்டு

இவன் சிலரது வாழ்க்கையில் கண்ணீரை விட்டுச்செல்வான்
இவன் பலரது வாழ்க்கையில் அழியா தடத்தையும் விட்டுச் செல்வான்

சனி மகாதிசையையும் தெரிந்துக் கொள்ளலாம்,
அனால் இவன் வரும் திசையை யாராலும் யூகிக்க முடியாது.

இவன் இவன் இவன்...யார் இவன்?
... ... ... நம் வாசலருகே காத்திருக்கும் "பிரிவு" தான் இவன் ... ... ...

No comments:

Post a Comment