Tuesday, October 27, 2009

நினைவுகள்

நிழலும் தொடர்வதை நிறுத்திவிடும் சூரியன் அஸ்த்தமனத்திற்குப் பிறகு
வாசம் தொடர்வதும் நின்றுவிடும் மலர் வாடிய பிறகு

அலைகள் ஒன்றை ஒன்று தொடர்வதை நிறுத்திவிடும் கரையை அடைந்தப் பிறகு
மூச்சுத் தொடர்வதும் நின்றுவிடும் ஆன்மா சென்ற பிறகு

பிறை நிலவும் வளர்வதை நிறுத்திவிடும் முழு நிலவானப் பிறகு
மெகா-சீரியல் தொடர்வதும் நின்றுவிடும் சில வருடங்களுக்குப் பிறகு

அதுபோல் ... ... ...

என் நினைவுகள் உன்னைத் தொடர்வதை நிறுத்திவிடும் உன் கடைப்பார்வைக்குப் பிறகு.


பி.கு: இது மலரும் நினைவுகள் அல்ல உன்னைத் தொடரும் நினைவுகள்...!!!


-இவன்
நா. இரவி ஷங்கர்.

1 comment: