என் விழிகள் உறங்கியும் உன் விழிகள் உறங்கவில்லை
நீ உறங்கினாலும் உன்னக விழிகளால் என்னை தாலாட்டிக் கொண்டிருப்பாய்
எத்துனை பேர் இருந்தாலும் உன் விழிகளால் எனக்கு பாடம் கற்பிப்பாய்
நீ பேசிய நேரத்தை விட உன் விழிகளால் பேசிய நேரமதிகம்
நம் விழிகள் ஒன்ருரகலந்து வாழ்க்கை என்ற ஒரே பார்வையாக மாறி
இனிதே திறப்போம் விழிகளை!!!
-இவன்
நா. இரவி ஷங்கர்
Sunday, October 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment