உந்தன் சந்தோஷத்தை என்னிடம் பகிர்ந்தாய்,
எந்தன் சோகத்தை என்னிடமிருந்து பகிர்ந்தாய்,
நான் தலை சாய உன் தோள்களை பகிர்ந்தாய்,
சரிவிலிருந்து நீ என்னை மேலே எழச்செய்தாய்,
எப்பொழுதும் நீ என்னை விழித்திருக்கச்செய்தாய்,
சமூகத்தில் என்னை ஒரு நல்ல நிலைக்கு வரச்செய்தாய்,
இப்படி இத்தனை "தாய்"-ஆக மாறி, எல்லாமும் ஆனாய் நீ எனக்கு...
நான் உனக்கு நண்பனா? இல்லை ...!!!
நான் உனக்கு காதலனா? இல்லை ...!!!
நான் உனக்கு கணவனா???
நான் காதலனாகவும்
ஒரு கணவனாகவும் பின்னர்
ஒரு நல்ல நண்பனைப் போல்
உன் வாழ்நாள் முழுவதும் உன்னுடன் தொடரவும்
உன்னுடன் வாழத்துடிக்கும்
உன்னுள் நானாகி உன்னுடன் இணைய நினைக்கும்.
- உன் காதலன்.
-இவன்
நா. இரவி ஷங்கர்
Saturday, October 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
வீட்டை விட்டு வெகுதூரம் சென்றால் இப்படித்தான் பீலீங் கவிதை வரும். கவிதை வரிகள் அருமை. உங்க வைப் பக்கத்துல இல்ல போல......
ReplyDeleteVaanga Vinay...Nandri.
ReplyDelete